×

பள்ளிகளில் சீருடையை பின்பற்ற வேண்டும் என்பதே என் கருத்து; பள்ளிக்கூடத்திற்குள் சீருடையில் தான் வர வேண்டும்: பாஜக நிர்வாகி குஷ்பு பேட்டி

சென்னை: பள்ளிக் கூடத்திற்குள் ஹிஜாப் அணிவது தவறு என்றால் காவி துண்டு, நீல துண்டு அணிந்து வருவதும் தவறு தான் என பாஜக நிர்வாகி குஷ்பு பேட்டியளித்தார். பள்ளிகளில் சீருடையை பின்பற்ற வேண்டும் என்பதே என் கருத்து என தெரிவித்தார். ஹிஜாப் அணிந்து செல்வதும் காவித் துண்டு அணிந்து செல்வதும் தவறு தான் என கூறினார். ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்வினையாக தான் காவி அணிந்து சென்றனர் என தெரிவித்தார். ஹிஜாப் அணிந்து வருவது அவர்களுடைய தனிப்பட்ட முடிவு என பேசினார். ஆனால் பள்ளிக்கூடத்திற்குள் சீருடையில் தான் வர வேண்டும் என தெரிவித்தார். பள்ளிக்கூடத்திற்கு வெளியில் வரை ஹிஜாப் அணிந்து வரலாம். பள்ளிக்குள் நுழையும்போது சீருடையில்தான் செல்ல வேண்டும் என கருத்து தெரிவித்தார்.

 இந்த விவகாரம் குறித்து அரசியல் செய்யக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் கூறுகிறது. நாங்களும் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய வேண்டும் என தெரிவிக்கிறோம். தேசியக்கொடியை இறக்கிவிட்டு காவிக்கொடியை ஏற்றியதாக குற்றச்சாட்டுகிறீர்கள். காவிக்கொடி ஏற்றியது எம்.டி. கம்பத்தில்தான். இருந்தாலும் அது தவறுதான். பள்ளிக்கூடத்திற்குள் ஜாதி, மதத்தை கொண்டு செல்லக்கூடாது. சீக்கியர்கள் குறித்து பேசுகிறீர்கள். தற்போதுள்ள விவகாரம் இந்து- முஸ்லிம் இடையிலானது என கூறினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சென்னையில் இன்று பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து குஷ்பு பிரசாரம் செய்தார். அப்போது அவரிடம் ஹிஜாப் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

Tags : Bajaba ,Kushpu , In schools, uniforms, must, Khushbu
× RELATED மகளிர் உரிமைத்தொகை குறித்து சர்ச்சை...