திருச்சி: சார்ஜாவிலிருந்து திருச்சிக்கு நேற்று காலை வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை இமிகிரேசன் மற்றும் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் ேசாதனையிட்டனர். அப்போது பயணி ஒருவர் உள்ளாடைக்குள் பசை வடிவில் 5 பாக்கெட்டுகளில் மறைத்து கடத்தி வந்த ரூ.48.62 லட்சம் மதிப்புள்ள 984 கிராம் தங்கத்தை கைப்பற்றினர். மற்றொரு பயணி ஆசன வாயில் பசை வடிவில் 3 பாக்கெட்டுகளில் பதுக்கி வந்த ரூ.33.06 லட்சம் மதிப்புள்ள 669 கிராம் தங்கத்தையும் பறிமுதல் செய்தனர். மொத்தம் ரூ.81.62 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 652 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.