×

கொரோனாவுக்கு டாடா...; தமிழகத்தில் நிலையான நோய் எதிர்ப்பாற்றல் பெற்றவர் எண்ணிக்கை 87% ஆக உயர்வு: சுகாதாரத்துறை தகவல்

சென்னை: தமிழக சுகாதார துறையின் 4வது கட்ட குருதி சார் ஆய்வில் நிலையான நோய் எதிர்ப்பாற்றல் பெற்றவர்களின் எண்ணிகை 70% லிருந்து 87% ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு எதிரான நிலையான நோய் எதிர்ப்பாற்றல் குறித்தான குருதி சார் ஆய்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. அதில் தமிழகத்தில் நிலையான நோய் எதிர்பாற்றல் பெற்றவர்கள் எண்ணிக்கை 87% ஆக அதிகரித்திருப்பதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்திருக்கிறது.

முதல் கட்டமாக கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் செய்யப்பட்ட ஆய்வில் பொதுமக்களின் நோய் எதிர்ப்பு சக்தி 32 %, 2-வது கட்டமாக 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் நோய் எதிர்ப்பு சக்தி 29%, 3-வது கட்டமாக 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் நோய் எதிர்ப்பு சக்தி 70%- மாக கணக்கிடப்பட்ட நோய் எதிர்ப்பாற்றல் தற்போது தடுப்பூசியின் காரணமாக அதிகரித்திருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தற்போது 4-வது கட்டமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட செரோ சர்வேயில் அதிகபட்சமாக  திருவாரூர் மாவட்டத்தில்93%-மும், தென்காசி-92%, பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, கன்னியாகுமரி, விருதுநகர்- 91%, கடலூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, நாமக்கல், திண்டுக்கல், திருவள்ளூர்-88%, நீலகிரி, அரியலூர், தூத்துக்குடி, ஈரோடு-87%, தேனி, திருச்சி, திருப்பூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, வேலூர், கரூர், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், செங்கல்பட்டு-86%, திருவண்ணாமலை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, கோவை, சேலம்-85%, விழுப்புரம், தர்மபுரி-84%-மும் , குறைந்த பட்சமாக காஞ்சிபுரம்-83%, திருப்பத்தூர்-82%மும் நோய் எதிர்ப்பாற்றல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு 32,245 பேரிடம் தலா 30 பேர் கொண்ட 1,076 குழுக்களாக பிரிந்து கிராமம், நகர்ப்புற பகுதிகளில் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மாநில பொது சுகாதார ஆய்வகங்களில் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 10-18 வயதிற்குட்பட்டவர்களில் 68.4 சதவீதத்தினரும், 18- 44 வயதிற்குட்பட்டவர்களில் 89.5 சதவீதத்தினரும், 45-59 வயதிற்குட்பட்டவர்களில் 88.6 சதவீதத்தினரும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 84.5 சதவீதம் பேரும் நிலையான நோய் எதிர்ப்பு ஆற்றல் பெற்றுள்ளதாக கணக்கிடப்பட்டு உள்ளது. ஆனால் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 27,324 பேரில் நோய் எதிர்ப்பு சக்தி 24,667 பேருக்கு 90% இருந்தது. தடுப்பூசி செலுத்தி கொள்ளாத 4,921 பேரில் 3,374 பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி  69% குறைவாக இருந்தது.


Tags : Tata ,Corona ,Tamil Nadu ,Health Department , Corona, Tata, Tamil Nadu, Immunity, Number, Rise, Health
× RELATED தமிழ்நாட்டில் ஐபோன் தயாரித்துவரும்...