×

பெரம்பூர் 37வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் பிரசாரத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கினார்

பெரம்பூர்: பெரம்பூர் 37வது வார்டு பதவிக்கு போட்டியிடும்  காங்கிரஸ்  வேட்பாளரின் பிரசாரத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கிவைத்தார். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் பெரம்பூர் 37வது வார்டில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக டில்லிபாபு போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து, சென்னை வியாசர்பாடி எம்கேபி நகர் அரசு பேருந்து போக்குவரத்து பணிமனை எதிரே அமைந்துள்ள பிரம்மாண்ட தேர்தல் பணிமனையை இன்று காலை 9 மணி அளவில் இந்து அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திறந்து வைத்தார். அப்போது அமைச்சருக்கு பூர்ணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், வேட்பாளரின் பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.  

இதில், சிறப்பு அழைப்பாளர்களாக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.டி.சேகர், அசன் மௌலானா, துரை சந்திரசேகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.   திமுக பகுதி செயலாளர் முருகன், காங்கிரஸ் சர்க்கிள் தலைவர் ரஜினி செல்வம் ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினர். திமுக 37வது வட்ட செயலாளர்கள் செந்தமிழ் அரசு, சி.எஸ்.ரவி, காங்கிரஸ் வட்ட தலைவர்கள் ஜே.ஜே.பி.ஆனந்த், லோகநாதன் மற்றும் தோழமைக்கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து வேட்பாளர் டில்லிபாபு, வியாசர்பாடி, எம்ஜிஆர் நகர், தாமோதிரன் நகர் ஆகிய  பகுதிகளில் கட்சியினருடன் தெருத்தெருவாக சென்று தீவிர  வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.


Tags : Perambur ,37th Ward Congress ,Minister ,P. KK Sakerbabu , Minister BK Sekarbabu launched the Perambur 37th Ward Congress candidate campaign
× RELATED பெரம்பூரில்தான் இந்த நிலை… இப்தார்...