சென்னை: பெத்தேல் நகரில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றுவது தொடர்பான வழக்கில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தின் பரப்பு, சர்வே எண், குடியிருப்புவாசிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. நேரடி ஆக்கிரமிப்பா அல்லது பிறரிடம் இருந்து வாங்கிய நிலமா என வகைப்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.