×

அம்பத்தூரில் 5 பேரை பட்டாக்கத்தியால் வெட்டிய ரவுடிகள்: தப்பிக்க சுவர் தாண்டி குதித்ததால் கை,கால்களில் எலும்பு முறிவு

சென்னை: சென்னை அம்பத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை ஆட்டோவில் சென்ற 2 ரவுடிகள் அடுத்தடுத்து 5 பொதுமக்களை பட்டகத்தியால் வெட்டி காயப்படுத்தினர். மேலும் 5-க்கும் மேற்பட்ட வாகனங்களையும் உடைத்து சேதப்படுத்தினர். இதில் திமுக பிரமுகரின் காரின் கண்ணாடிகளை கத்தியால் வெட்டி, அடித்து, உடைத்து விட்டு தப்பிச் சென்றனர். அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் மூலம் அந்த ரவுடிகளை அடையாளம் காண போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டனர். இதில் அங்குள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் பீர் வாங்கிய இருவர் அங்கிருந்தவர்களிடம் பட்டகத்தியை  காண்பித்து மிரட்டிய காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த சிசிடிவி காட்சியின் இறுதியில் கத்தியுடன்  சுற்றிய இருவரும் ஆட்டோவில் சென்று தப்பியது தெரியவந்தது.

அந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணையை முன்னெடுத்த காவல்துறையினர், அவர்கள் 2 பேரும் வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த ரேசர் கணேசன் மற்றும் கணேஷ் ஆகிய இருவரும் என கண்டுபிடித்து அவர்களை வலைவீசி தேடினர். ஒரு இடத்தில் பதுங்கி இருந்த இருவரும் போலீசாரிடம் இருந்து தப்பிச் செல்வதற்காக சுற்றுச்சுவர் ஒன்றை ஏறி குதித்தபோது வழுக்கி விழுந்து ஒருவனுக்கு இடது கையும், மற்றொருவனுக்கு இடது காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. எலும்புமுறிவால் அவதிப்பட்ட இருவரையும் மனிதாபிமானத்தோடு மீட்ட போலீசார் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மனிதாபிமானத்துடன் மாவுக்கட்டு போட்டுவிட்டனர். இதுபோல யாராவது கையில் கத்தியுடன் பொதுவெளியில் ரகளையில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆவடி மாநகர காவல்துறையினர் எச்சரித்திருக்கிறார்கள்.          


Tags : Rowdies ,Ambattur , Ambattur, Sword, Rowdies, Wall, Jumping, Hand, foot, Fracture
× RELATED மாநகர பஸ் கண்ணாடி உடைப்பு