அரூர் : அரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. அரூர், கம்பைநல்லூர், கோட்டப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 444 விவசாயிகள் 3 ஆயிரம் மூட்டை பருத்தியை கொண்டு வந்திருந்தனர். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டனர். விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர். இதில் ஆர்சிஎச் ரகம் பருத்தி குவிண்டால் ₹9,130 முதல் ₹10,901 வரையும், டிசிஎச் (வரலட்சுமி) ரகம் பருத்தி குவிண்டால் ₹11,149 முதல் ₹12,609 வரையும் ஏலம் போனது. ஒ்ட்டு மொத்தமாக விவசாயிகள் கொண்டுவந்த 3 ஆயிரம் மூட்டை பருத்தி ₹1.05 கோடிக்கு விற்பனையானது என அதிகாரிகள் தெரிவித்தனர்.