டெல்லி: பாதுகாப்புத் துறையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என பாதுகாப்புத் துறை இணையமைச்சர் அஜய் பட் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு உபகரணங்களை இறக்குமதி செய்வதை தவிர்க்கும் வகையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள 33 சைனிக் பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் 312 பெண் குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் கூறினார்.