×

புஷ்பா பட பாணியில் பெட்ரோல் டேங்கரில் 2 டன் கஞ்சா கடத்தல்; போலீஸ் கண்காணிப்பை கண்டவுடன் தப்பி ஓடிய கடத்தல்காரர்கள்

அமராவதி: ஆந்திராவில் புஷ்பா பட பாணியில் பெட்ரோல் டேங்கரில் மறைத்து வைத்து கடத்தப்பட்ட 2 டன் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். விஜயநகரம் பகுதியில் அமைந்துள்ள அரக்கு மலைப்பகுதியில் இருந்து ஹைதராபாத் நகருக்கு லாரி மூலமாக கஞ்சா கடத்த உள்ளதாக சிறப்பு அதிரடி படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து விஜயநகரம் - ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் சோதனைச்சாவடி அமைத்துஅதிரடி படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அதிகாலை சோதனைச்சாவடி அருகே பெட்ரோல் டேங்கர் லாரியில் வந்தவர்கள் போலீசார் கண்காணிப்பை பார்த்தவுடன் அங்கிருந்து தப்பி சென்றனர். இதனை கவனித்த போலீசார் அந்த பெட்ரோல் டேங்கர் லாரியை சோதனை செய்ததில் மூட்டை மூட்டையாக கஞ்சா இருப்பது தெரியவந்தது. மொத்தம் 2000 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags : Pushpa , Pushpa, style, petrol tanker, 2 tons of cannabis, police
× RELATED சவுந்தரராஜ பெருமாள் புஷ்ப பல்லக்கு