திருவனந்தபுரம் : மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 12-ஆம் தேதி திறக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து தீபம் ஏற்றுவார். அன்றைய தினம் எந்த விசேஷ பூஜைகளும் இருக்காது என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.