×

கஞ்சா கடத்திய வாலிபர் கைது: 1.15 கிலோ பொட்டலங்கள் பறிமுதல்

திருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த காக்களூர் எடை மேடை அருகே நேற்றுமுன்தினம் திருவள்ளூர் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் போலீசாரை கண்டதும் தான் வைத்திருந்த பையுடன் ஓட்டம் பிடித்தார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை விரட்டிச் சென்று பிடித்து விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதித் கூறினார். இதனால்  சந்தேகம் அடைந்த போலீசார் அவர் வைத்திருந்த பையை திறந்து பார்த்தபோது அதில் 1.15 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றை  பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா கடத்தியதாக திருவள்ளூரை அடுத்த திருநின்றவூர் கன்னிகாபுரத்தை சேர்ந்த கார்த்திக் (21) என்பவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Youth arrested for smuggling cannabis: 1.15 kg bags seized
× RELATED இலங்கைக்கு ₹4 கோடி மதிப்பு மாத்திரைகள் கடத்தியவர் கைது