ஒரத்தநாடு: ஒரத்தநாடு அருகே ஆசிரியர் திட்டியதால், பிளஸ் டூ மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே பருத்தியப்பர் கோயில் பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி. வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் வித்யா (17). அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார்.
இந்நிலையில் மாணவி வித்யா நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை சக மாணவர்கள் முன்னிலையில் கணித ஆசிரியர் திட்டியதாக கூறப்படுகிறது. இதில் மன உளைச்சலில் இருந்து வந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக அதே பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு இதற்கான காரணத்தை வித்யா வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் அனுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்கு பதிந்து ஆசிரியர் சசிகுமாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.