தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியில் 70 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் தொடங்கிய கடந்த 28ம் தேதி முதல் திமுக, காங்கிரஸ், அதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 409 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இறுதி நாளான நேற்று 425 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதன்மூலம், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட 70 வார்டுகளிலும் சேர்த்து மொத்தம் 834 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.