×

திருச்சி விமான நிலையத்தில் 2 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி: திருச்சி விமான நிலையத்துக்கு நேற்றுமுன்தினம் துபாயிலிருந்து இண்டிகோ விமானம் வந்தது. அதில் வந்த 2 பயணிகள் கொண்டு வந்த பேக்கை சோதனையிட்டபோது, அந்த பேக்குகள் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டிருந்ததும், அதற்குள் 2 கிலோ தங்கம் கடத்தி வந்ததும் ஸ்கேனர் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில், கடத்தலில் ஈடுபட்டவர்கள் சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த நஷீர்கான் முகமது, சென்னை ராயபுரம் லுக்மான் என்பது தெரியவந்தது.



Tags : Trichy airport , At Trichy Airport Seizure of 2 kg smuggled gold
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...