லக்னோ: ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் ஒவைசிக்கு ஒன்றிய ரிசர்வ் பாதுகாப்புப் படையின் Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அசாதுதீன் ஓவைசி சென்ற கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதை தொடர்ந்து ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஓவைசி சென்ற கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. காரில் 3 குண்டுகள் பாய்ந்தது.