சென்னை: எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கத்திற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. பிப்ரவரி 25ம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் பெருநகர சென்னை ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.