சென்னை: அமிதாப் பச்சன் தெற்கு டெல்லியில் உள்ள தனது பூர்வீக வீட்டை விற்று விட்டார். பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு தெற்கு டெல்லியில் குல்மோகர் பூங்கா பகுதியில் ஒரு பழமையான பூர்வீக வீடு ஒன்று இருந்தது. இந்த வீட்டில் அமிதாப் பச்சனின் பெற்றோர் தேஜி பச்சன், ஹரிவன்ஷ்ராய் பச்சன் ஆகியோர் குடியிருந்தனர். அபிதாப் பச்சன் மும்பை வருவதற்கு முன் தன் பெற்றோருடன் இங்கு வசித்துள்ளார். பல ஆண்டுகளாகவே பூட்டிக் கிடந்த இந்த வீட்டை அமிதாப் பச் சன் தற்போது ரூ.23 கோடிக்கு விற்றுள்ளார். இந்த வீட்டை நெசோன் குழும நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி அவ்னி பேடர் வாங்கியுள்ளார். இவர் அமிதாப்பின் பூர்வ வீட்டின் பக்கத்து வீட்டுக்காரர் மற்றும் அமிதாப்பின் குடும்ப நண்பர் ஆவார். அமிதாப் பச்சனுக்கு மும்பையின் ஜூஹூ பகுதியில் ஜனக், ஜல்சா, பிரதீக்ஷா, வத்சா, அம்மு ஆகிய ஐந்து பங்களாக்கள் உள்ளன. இதுதவிர, சமீபத்தில் அந்தேரி பகுதியில் ரூ.31 கோடிக்கு ஒரு புதிய டூப்ளக்ஸ் வீடு வாங்கினார்.