சென்னை: கடந்த 4 மாதங்களில் 4,717 சட்டவிரோத பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 2016-2021ல் சட்டவிரோதமாக பேனர்கள் வைத்தது தொடர்பாக 10,926 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சட்டவிரோத பேனர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை தொடர்பான வழக்குகளின் விசாரணை பிப்ரவரி 18ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.