சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 4 மாதங்களில் 4,717 சட்ட விரோத பேனர்கள் அகற்றப்பட்டுள்ளது என நகராட்சி நிர்வாகத் துறை தெரிவித்துள்ளது. கடந்த 2016 முதல் 2021 வரை சட்ட விரோத பேனர்கள் வைத்தது தொடர்பாக உள்துறை 10,926 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பேனர்களை அகற்றுவதற்கான செலவை சம்மந்தப்பட்டவர்களிடம் வசூலிக்க வேண்டும் என பொறுப்புத் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.