×

சந்திரயான் 3 விண்கலம் ஆகஸ்ட்டில் ஏவப்படும்: மக்களவையில் திருநாவுக்கரசர் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசு பதில்

டெல்லி: சந்திரயான் 3 விண்கலம் ஆகஸ்ட்டில் ஏவப்படும் என்று மக்களவையில் திருநாவுக்கரசர் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசு பதிலளித்துள்ளது. சோதனைகள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் வெற்றி பெற்று விட்டதால் ஏவும் பணி ஆகஸ்ட்டில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. நிலவின் தென்துருவத்தை ஆராய சந்திரயான் 2 விண்கலம் மூலம் விக்ரம் லேண்டரை இஸ்ரோ அனுப்பியிருந்தது. நிலவில் தரை இறங்கும் முன் விக்ரம் லேண்டரின் தொடர்பு துண்டானதால் சந்திரயான் 3 விண்கலம் அனுப்பப்படுகிறது.


Tags : Union government ,Thirunavukarasar ,Lok Sabha , Chandrayaan 3 spacecraft, August, Government of the United States
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...