மதுரை: சாத்தூர் வெடிவிபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் வழங்கிய அரசுக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் இழப்பீடு இறந்தோர் குடும்ப துயரை சிறிதளவாவது துடைக்கும் என நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். சாத்தூர் வெடிவிபத்தில் யாராவது தனிநபர்கள் நிவாரணம் பெற விரும்பினால் கீழமை நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் நீதிபதி கூறியுள்ளார். 12 பேரின் குடும்பத்துக்கு இழப்பீடு தரப்பட்ட நிலையில் 2 பேரின் குடும்பம் எங்கு உள்ளது என தெரியவில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 2020 மார்ச்சில் சாத்தூர் ராஜம்மாள் பயர் ஒர்க்ஸ் ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.