சென்னை: ஈபிஎஸ்-ஐ தாமதமாக பாஜக புரிந்துகொண்டுள்ளது; முன்பே உணர்ந்திருந்தால் முறைகேடான ஆட்சியை தடுத்திருக்கலாம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலில் மக்கள் காசை பார்க்காமல் நல்ல வேட்பாளர்களை பார்த்து வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.