×

பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.53 லட்சம் பறிமுதல்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் குரும்பர் பேரூராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.53 லட்சம் பிடிபட்டது. பெரம்பலூர் - துறையூர் சாலையில் பாளையம் பேருந்து நிலையத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பழனிச்செல்வம் (தனி வட்டாட்சியர் ஸ்டாம்ப்) தலைமையில் அவரது குழுவினர் சற்று முன் வாகன சோதனையில் ஈடுபட்டனர் போது பெரம்பலூரில் இருந்து குரும்பலூருக்கு வருகை தந்த ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா என்ற வங்கி வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.53லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தேர்தல் குரும்பலூர் பேரூராட்சி தேர்தல் அலுவலர் மெர்ஸியிடம் ஒப்படைத்தார்.

Tags : Election Flying Soldiers ,Perambulur district , Perambalur, Election Flying Corps, check, Rs 53 lakh, confiscated
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் 2 நாட்கள் பெய்த மழையால் 28 ஏரிகள் நிரம்பியது