×

சூளகிரி அருகே மஞ்சப்பை பயன்பாடு விழிப்புணர்வு பேரணி

சூளகிரி : சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், சென்னப்பள்ளி ஊராட்சி மேடுப்பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு- மஞ்சப்பை பயன்பாடு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மேடுப்பள்ளியில் உள்ள தொடக்கப்பள்ளி வளாகத்தில் இருந்து துவங்கிய பேரணிக்கு, பிடிஓக்கள் சிவக்குமார், சுப்பிரமணி ஆகியோர் தலைமை வகித்தனர். பொறியாளர் விமலா, மேற்பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி மன்றத் தலைவர் சரஸ்வதி செல்வம், துணைத் தலைவர் சுசீலா திம்மராயன், செயலர் சரவணன், வார்டு உறுப்பினர் கவுரம்மா நாராயணன், அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜேனட் பெலிசிட்டா மற்றும் ஆசிரியர்கள் ஜாய், துரச்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊர்வலத்தில் தூய்மைப் பணியார்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு வீதி வீதியாக சென்று, அனைவரும் மஞ்சப்பையை உபயோகிப்போம் என வலியுறுத்தி மஞ்சப்பை மற்றும் துண்டு பிரசுரங்களை வழங்கினர். அப்போது, விதி மீறி பிளாஸ்டிக் யன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.


Tags : Yellowstone ,Choolagiri , Choolagiri: On behalf of the Choolagiri Regional Development Office, Plastic Eradication Awareness at Sennappalli Panchayat High School - Use of Yellow
× RELATED காரில் கொண்டு சென்ற ₹1.67 லட்சம் பறிமுதல்