டெல்லி: உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 68 சதவீதம் ராணுவ தளவாடங்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இறக்குமதியை குறைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பதாகவும், உள்நாட்டு நிறுவனங்களிடம் இருந்து ராணுவத்திற்கு தேவையான தளவாடங்களை வாங்க முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பதாகவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.