சென்னை: டிடிவி.தினகரன் டிவிட்டர் பதிவு: முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து மறு ஆய்வு வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய நீர்வள ஆணையம் அறிக்கை அளித்திருப்பது கண்டனத்திற்குரியது. ஏற்கனவே, உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவினர் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானது என்று உறுதிபட தெரிவித்துவிட்ட பிறகும் திடீரென தேவையற்ற பிரச்னையைக் கிளப்புவது நல்லதல்ல. எனவே, ஒன்றிய நீர்வள ஆணையம் நடுநிலையோடு நடந்துகொண்டு தமது அறிக்கையை திரும்பப்பெற வேண்டும்.