×

சிறுமியிடம் சில்மிஷம் போக்சோவில் வாலிபர் கைது

திருத்தணி: சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருத்தணி அடுத்த தெக்களூர் காலனியை சேர்ந்தவர் ராஜ்குட்டி(22). அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி தனது வீட்டில் இரவு தனியாக படுத்து தூங்கிக்கொண்டிருந்தாள். அப்போது ரஜ்குட்டி யாருக்கும் தெரியாமல் சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்ததாக தெரிகிறது. இதனால் சிறுமி கூச்சல் போடவே பெற்றோர் வந்து பார்த்தபோது ராஜ்குட்டி அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். புகாரின்படி திருத்தணி மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குட்டியை போக்சோவில் கைது செய்தனர்.

Tags : Silmisham Pokcho , The boy was arrested in Silmisham Pokcho
× RELATED சிறுமியிடம் சில்மிஷம் போக்சோவில் வாலிபர் கைது