×

ஐக்கிய அரபு அமீரகம் மீது ஹவுதி கிளர்ச்சி படை ஏவுகணை தாக்குதல்: சுட்டு வீழ்த்தியதாக தகவல்

துபாய்: ஏமனில் உள்நாட்டு போரை நடத்தி வரும் ஹவுதி கிளர்ச்சி படைக்கு எதிரான சவுதி கூட்டுப்படையில் ஐக்கிய அரபு அமீரகம்  இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், ஏமனின் அல் ஜாப் பகுதியில் இருந்து யுஏஇ-யை நோக்கி ஹவுதி கிளர்ச்சி படையினர் நேற்று அதிகாலை 12.50 மணிக்கு அனுப்பிய தொலைதூர இலக்கினை தாக்கும் ஏவுகணையை ஐக்கிய அரபு அமீரகம் சுட்டு வீழ்த்தியது. இந்த ஏவுகணை மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில் விழுந்ததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. கூட்டுப்படையினர் வழிகாட்டுதலின் படி ஏவுகணையை சுட்டு வீழ்த்தியதாக யுஏஇ பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹவுதி கிளர்ச்சி படையினர் கடந்த வாரம் அபுதாபிக்கு ஏவிய 2 ஏவுகணைகளை யுஏஇ படையினர் இடைமறித்து சுட்டு வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Tags : Houthi ,United Arab Emirates , Houthi rebel force launches missile attack on United Arab Emirates
× RELATED ஹமாசுக்கு ஆதரவாக செயல்படும் ஹவுதி...