தென்காசி : ஞாயிறு முழு ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதை தொடர்ந்து குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.குற்றாலத்தில் மூன்று வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாத நிலையில் தற்போது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்டது.
இதனால் மூன்று வாரங்களுக்குப்பிறகு சுற்றுலா பயணிகள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று குற்றால அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். மழை இல்லாத காரணத்தால் அருவிகளில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்து விட்டது. மெயினருவியில் பாறையை ஒட்டினாற்போன்று சிறிதளவு தண்ணீர் விழுகிறது. ஐந்தருவியில் இரண்டு பிரிவுகளில் ஓரளவு தண்ணீர் விழுகிறது. பழைய குற்றால அருவியிலும் தண்ணீர் குறைவாக விழுகிறது. சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைவாகவே காணப்பட்டது.