×

ஞாயிறு முழு ஊரடங்கு தளர்வு போச்சம்பள்ளியில் வாரச்சந்தை கூடியது

போச்சம்பள்ளி : தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 3 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், ஞாயிறுதோறும் கூடும் போச்சம்பள்ளி வாரச்சந்தை நடைபெறவில்லை. இதனால் வியாபாரிகளும், விவசாயிகளும் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில், இரவு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு விலகப்பட்டதால் 3 வாரங்களுக்கு பிறகு நேற்று போச்சம்பள்ளி வாரச்சந்தை வழக்கம் போல் கூடியதால், வியாபாரிகளும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த சில வாரங்களுக்கு பிறகு நேற்று கூடிய சந்தைக்கு வியாபாரிகள் ஆடு, மாடுகள், கோழி மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதனால், வாரச்சந்தையில் வியாபாரம் களை கட்டியது. சந்தையில் ₹1 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : Pochampally , Pochampally: Full curfew on Sundays for the last 3 weeks due to the spread of corona infection in Tamil Nadu
× RELATED போச்சம்பள்ளியில் உள்ள பிரபல...