×

அவனியாபுரத்தில் சோபா கம்பெனியில் தீ விபத்து-₹20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்

அவனியாபுரம் : அவனியாபுரத்தில் சோபா மற்றும் பஞ்சு மெத்தை உற்பத்தி செய்யும் கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கருகி நாசமடைந்தன.
அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர் உமர் பரூக். இவர் அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகர் பகுதியில் சோபா மற்றும் பஞ்சு மெத்தை உற்பத்தி செய்யும் கம்பெனி நடத்தி வருகிறார். நேற்று மதியம் அந்த குடோனில் இருந்த பஞ்சு மெத்தைகள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

இதனை அடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது மதுரை நகரில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்கள் மூலம் பத்திற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். குடோனில் சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான சோபா, மெத்தை என அனைத்து பொருட்களும் கருகி நாசமானது.மேலும், இந்த சம்பவத்திற்கு காரணம் மின்கசிவா அல்லது வேறு ஏதேனும் காரணமா என அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அவனியாபுரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Avaniapuram ,Sofa Company , Avaniapuram: A fire broke out at a sofa and cotton mattress manufacturing company in Avaniapuram. Of which Rs. Items worth Rs 20 lakh were burnt and damaged.
× RELATED சட்டவிரோத பண வரவை தடுக்க மதுரை விமான...