புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே எஸ்.குளவாய்பட்டி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் எஸ்.குளவாய்பட்டி ஊராட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தற்போது மூடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தால் 100 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட பட்டியலில் 6- வது இடத்தில் எஸ்.குளவாய்பட்டி நெல் கொள்முதல் நிலையம் இருந்தது.
பிரச்சனை குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று விவசாயிகள் கூறினர். நெல் கொள்முதல் நிலையம் தொடங்கவில்லை என்றாலும் ஒட்டுமொத்த நெல்மூட்டைகளையும் புதுக்கோட்டை அறந்தாங்கி சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.