சென்னை: முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் சாந்தி (30, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு 7 மற்றும் 6 வயதில் 2 மகள்கள் உள்ளனர். இவர்கள், நேற்று முன்தினம் மாலை வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஒருவர், சாக்லெட் தருவதாக கூறி சிறுமிகளை மறைவான இடத்துக்கு அழைத்து சென்று, சில்மிஷம் செய்துள்ளார். இதுபற்றி நொளம்பூர் போலீசில் சாந்தி புகார் அளித்தார். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த நித்யானந்தம் (50) என்பதும், இவர் தனியார் நிறுவனத்தில் ஆடிட்டராக வேலை பார்ப்பதும் தெரியவந்தது. அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.