×

செங்கல்பட்டு அரசு ஐடிஐ வளாகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் துவக்கம்: கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள அறிக்கை. செங்கல்பட்டு மாவட்டத்தில், புதிதாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் செங்கல்பட்டு அரசு ஐடிஐ வளாகத்தில், துவங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் படித்த இளைஞர்கள், வேலைக்காக காத்திருப்போர், இந்த மையத்தில் புதிய பதிவு, புதுப்பித்தல் கூடுதல் கல்வித்தகுதி பதிவு ஆகியவை செய்யலாம். வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற இங்கு இயங்கும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பிரிவை நேரில் தொடர்பு கொள்ளலாம். அனைத்து வகையான அரசு போட்டி தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு வேலை வாய்ப்பை பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

Tags : District ,Employment ,Center ,Chengalpattu Government ,ITI Campus , Inauguration of District Employment Center at Chengalpattu Government ITI Campus: Collector Information
× RELATED கடலூர் மாவட்டத்தில் வள்ளலார்...