×

உப்பனார் வாய்க்கால் தூர்வாரும் பணி துவக்கம்: அனிபால் கென்னடி எம்எல்ஏ நடவடிக்கை

புதுச்சேரி: புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட உப்பனார் வாய்க்காலை தூர்வாரக்கோரி வாணரப்பேட்டையை சேர்ந்த எல்லையம்மன் கோயில் மற்றும் காளியம்மன் கோயில் தோப்பு பொதுமக்கள், திமுக மாநில துணை அமைப்பாளரும், தொகுதி எம்எல்ஏவுமான அனிபால் கென்னடியிடம் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று, பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவு துணை பொறியாளர் சுவாமிநாதனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, விரைவாக தூர்வாரும் பணியை மேற்கொள்ள வலியுறுத்தினார்.

தொடர்ந்து, நேற்று அவருடன் சென்று உப்பனார் வாய்க்காலை அனிபால் கென்னடி எம்எல்ஏ பார்வையிட்டார். பின்னர், வாய்க்காலில் உள்ள பிளாஸ்டிக் குப்பை, மண் போன்றவற்றை மிஷின் மூலம் தூர்வாரி சீரமைத்தார். மேலும், அப்பகுதி மக்களிடம் நேரில் சென்று, வாய்க்காலில் குப்பைகளை கொட்டினால் அடைப்பு ஏற்பட்டு கொசுக்களால் கொடிய நோய்களின் தாக்கத்திற்கு ஆளாக நேரிடும். நகரில் கழிவு மற்றும் மழைநீர் தேங்குவது அதிகரிக்கும், எனவே வாய்க்காலில் குப்பைகளை தூக்கி எறியாதீர்கள் என எம்எல்ஏ கேட்டுக்கொண்டார்.

மேலும் கொசு மற்றும் கொரோனா கிருமி நாசினி நகராட்சி மூலம் தெளிக்க ஏற்பாடுகள் செய்துள்ளதாக தெரிவித்தார், அப்போது, திமுக தொகுதி செயலாளர் சக்திவேல், விவசாய அணி மாநில துணை அமைப்பாளர் ரகோத்தமன், இளைஞர் அணி ராஜி, அசோக், மாயவன், இருதயராஜ், பாலாஜி, ஸ்டாலின், லாரன்ஸ், மோரீஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Anipal Kennedy , Inauguration of the Uppanar Canal: Anipal Kennedy MLA Action
× RELATED புதுச்சேரி மாநிலத்துக்கு ஆளுநர்...