×

பேரணாம்பட்டு அடுத்த பத்திரப்பள்ளியில் மழையால் சேதமான தரைப்பாலத்தை சீரமைக்க கோரிக்கை

பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு அடுத்த பத்திரப்பள்ளி கிராமத்தில் உள்ள பிருந்தாவனம் பகுதியில்  தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் சேதமடைந்தது. ேமலும், இரு கரைகளின் ஓரங்களில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது  பாலத்தின் மீது எந்தவொரு வாகனமும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்திலிருந்து ஆம்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வர இந்த பாலம் இருந்து வந்தது. ஆகையால், இந்த தரைப்பாலத்தை விரைவில் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Peranampattu , Demand for repair of rain-damaged ground bridge at Peranampattu next bond school
× RELATED வேனுடன் 210 கிலோ கடத்தல் ரேஷன் அரிசி,...