×

கர்நாடக முன்னாள் முதல்வரும் பா.ஜ.க மூத்த தலைவருமான எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யா தூக்கிட்டு தற்கொலை: உடலை கைப்பற்றி போலீஸ் விசாரணை

கர்நாடக:  கர்நாடக முன்னாள் முதல்வரும் பா.ஜ.க மூத்த தலைவருமான எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யா பெங்களூருவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்நிலையில் சவுந்தர்யாவின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடக மாநிலம் பாரதிய  ஜனதா கட்சியின் தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான பி.எஸ் .எடியூரப்பாவின் மகள் வழி பேத்தி சௌந்தர்யா. இவருக்கு வயது 30 ஆகும். சௌந்தர்யாவுக்கு 6 மாத குழந்தை உள்ளது. சவுந்தர்யா  மத்திய பெங்களூருவில் ஒரு அடுக்குமாடு குடியிருப்பில் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார்.

பயிற்சி மருத்துவரான இவர் பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். அந்த மருத்துவமனையில் பணிபுரிந்த சக மருத்துவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், சவுந்தரியா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சௌவுந்தரியா  எடியூரப்பாவின் மகள் வழி பேத்தி ஆவார். சௌந்தரியா தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சௌந்தரியாவில் உடலை கைப்பற்றி பெங்களூரு போரிங் மற்றும் லேடி கர்சன் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று வருகிறது.

Tags : Soundarya ,Karnataka ,Chief Minister ,BJP ,Eduyurappa , Edyurappa, granddaughter, hanged, committed suicide
× RELATED வறட்சி நிவாரணத்தை உடனடியாக விடுவிக்க...