சென்னை: சென்னை கிண்டியில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் வேளாண்மைத்துறை பூங்கா அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. கிண்டியில் 6.8 ஏக்கர் பரப்பளவில் வேளாண்மை பூங்கா அமைக்கும் பணியை மார்ச்சில் முடிக்க அரசு தீவிரம் காட்டி வருகிறது. மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் நறுமண தாவரங்கள், மூலிகை செடிகள் அமைக்கப்படவுள்ளன. பொதுமக்களை கவரும் வகையில் ரூ.15 லட்சம் மதிப்பில் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.