சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என திருநெல்வேலி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேட்டியளித்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்து வெற்றி பெறலாம் என நினைக்கிறது என கூறிய முத்தரசன் மதசார்பு மற்றும் அரசியலமைப்பு காக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி பிப்ரவரி 23,24 வேலை நிறுத்த போராட்டம் நடைபெறவுள்ளது என தெரிவித்தார். அனைத்து பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பது கண்டனத்திற்குரியது என முத்தரசன் தெரிவித்துள்ளார்.