×

பூர்வீக நிலத்தை உறவினர்கள் அபேஸ்: டவர் மீது ஏறி டிரைவர் தற்கொலை முயற்சி

பூந்தமல்லி: கோயம்பேடு அடுத்த நெற்குன்றத்தை சேர்ந்தவர் நாகராஜ் (41), கார் டிரைவர். இவருக்கு, திருவள்ளூர் அருகே அரண்வாயல் பகுதியில் பூர்வீக சொத்து உள்ளது. இதை, நாகராஜின் உறவினர்கள் போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நாகராஜ் பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த நாகராஜ், நேற்று காலை மதுரவாயல் காவலர் குடியிருப்பில் உள்ள வாக்கி டாக்கி டவர் மீது ஏறி, அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயன்றார். தகவலறிந்து மதுரவாயல் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, நாகராஜிடம் சமரசம் பேசி, கீழே இறக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் அவர் இறங்கி வரவில்லை. இதையடுத்து, அவரது மனைவி, குழந்தைகளை வரவழைத்து, அவருடன் பேச வைத்தனர். ஒருமணி நேரத்துக்கு பின் அவர் கீழே இறங்கினார்.


Tags : Climber , Native Land Relatives Abbey: Attempted Suicide by Climber on Tower
× RELATED மலையுறை மருகனை மனங்களில் ஏந்துவோம்!