×

நயினார் நாகேந்திரன் மன்னிப்பு கேட்க வேண்டும்: அதிமுக எம்எல்ஏ காட்டம்

புவனகிரி: கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், புவனகிரி தொகுதி எம்எல்ஏவுமான அருண்மொழித்தேவன் நேற்று சிதம்பரத்தில் அளித்த பேட்டி: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தலைவர்கள் முன்னிலையில் சட்டமன்றக் கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன், சட்டப்பேரவையில் அதிமுகவினர் யாரும் ஆண்மையோடு பேசவில்லை என அதிமுகவை குறை சொல்லி இருக்கிறார். அதுமட்டுமல்ல, அடுத்தது பாஜக தலைமையில் ஆட்சி அமைக்கும் என்ற நகைச்சுவையையும் அவர் கூறியிருக்கிறார். அண்ணாமலை, எடப்பாடியிடம் பேசி விட்டேன். வருத்தம் தெரிவித்தேன் என்று சொல்லியிருக்கிறார். நயினார் நாகேந்திரன் பேசும்போது அந்த மேடையிலேயே அருகில் இருந்து ரசித்துக் கேட்டவர் அண்ணாமலை. நயினார் நாகேந்திரன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இதுதான் எங்களின் கோரிக்கை. பேசும்போது அந்த இடத்தில் ரசித்து கேட்டு விட்டு மறுநாள் காரணம் சொல்வது ஏற்கத்தக்கது அல்ல. அதிமுக தயவால்தான் பாஜகவினர் 4 பேரும் எம்எல்ஏக்கனாக வெற்றி பெற்றார்கள் என்பது நாட்டுக்கே தெரியும், என்றார். சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ பாண்டியன் உடனிருந்தார்.

Tags : Nayyar Nagendran ,AIADMK ,MLA , Nainar Nagendran should apologize: AIADMK MLA show
× RELATED திருநெல்வேலி தொகுதி பாஜ வேட்பாளர்...