டெல்லி: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பிப்.28-ம் தேதி வரை கட்டுப்பாடுகளை நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா, ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகள், வழிகாட்டு நெறிமுறைகளை ஒன்றிய உள்த்துறை அமைச்சகம் நீட்டித்துள்ளது. மக்கள் அனைவரும் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றுவதை மாநில, யூனியன் பிரதேச அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுத்தப்பட்டுள்ளது.