×

மணப்பாறை அருகே விட்டுச் சென்ற பெண் குழந்தையை மீட்டு தருமாறு போலீசிடம் புகார் அளித்த தாய்

திருச்சி: மணப்பாறை அருகே 3-வதாக பிறந்த பெண் குழந்தையை அரசு மருத்துவமனை பின்புறம் அவரது தாய் விட்டுச் சென்றதாக கூறப்பட்டுகிறது. கணவர் திட்டியதால் குழந்தையை விட்டுச் சென்றதாக காவல் நிலையத்தில் தனலெட்சுமி என்பவர் கண்ணீருடன் புகார் அளித்தார். குழந்தையை தன்னிடம் ஒப்படைக்குமாறு காவல் நிலையத்தில் தனலெட்சுமி முறையீடு செய்துள்ளார். குழந்தையை திருச்சி குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழுவில் ஒப்படைத்துவிட்டதாக போலீஸ் தகவல் தெரிவித்தனர்.


Tags : Manapparai , baby, mother, manaparai, police
× RELATED மணப்பாறை அருகே அரசுப் பள்ளியில்...