சென்னை: அனைத்துத் துறைகளிலும் நம் மக்களை முன்னேற்றுவதில் நாம் புரிந்த சாதனைகளை எண்ணிப் பெருமிதம் கொள்வோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து முதல்வர் சமூக வலைதளத்தில், இந்தக் குடியரசு நாளில் அரசியலமைப்பின் மதச்சார்பின்மைப் பண்பினை உயர்த்திப் பிடிக்க உறுதியேற்று, அனைத்துத் துறைகளிலும் நம் மக்களை முன்னேற்றுவதில் நாம் புரிந்த சாதனைகளை எண்ணிப் பெருமிதம் கொள்வோம் என பதிவிட்டுள்ளார்.