தஞ்சை: தஞ்சை பள்ளி மாணவியின் விடியோவை பதிவு செய்த முத்துவேல் வல்லம் டி.எஸ்.பி. அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். உயர்நீதிமன்ற கிளை நேற்று உத்தரவிட்டதை அடுத்து மாணவியின் தந்தை, வீடியோ பதிவு செய்தவர் டி.எஸ்.பி. அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். வீடியோ பதிவு செய்த செல்போனையும் விசாரணை அதிகாரியிடம் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.