×

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 30,215 ஆக குறைவு

சென்னை: சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், நேற்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 30,215 ஆக குறைந்தது. மேலும் சிகிச்சை பலனின்றி 46 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருவதால் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும் சென்னையில் கடந்த 19ம் தேதி 7,298 பேருக்கும், 20ம் தேதி 7,520 பேருக்கும், 21ம் தேதி 7,038 பேருக்கும், 22ம் தேதி 6,452 பேருக்கும், 23ம் தேதி 6,383 பேருக்கும், நேற்று 6,296 பேர் என 5 வது நாளாக தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதேபோல் 22ம் தேதி 30,744 பேருக்கும், 23ம் தேதி 30,580 பேருக்கும், நேற்று 30,215 பேருக்கும் என படிப்படியாக தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை கடந்த மூன்று நாட்களாக குறைந்து வருகிறது.

இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,51,217 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 30,215 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கொரோனாவிற்கு 2,06,484 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 24,639 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 29,20,457 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 46 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதன்படி இதுவரை 37,218 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் அதிகபட்சமாக நேற்று சென்னையில் 6,296 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. செங்கல்பட்டு 1,742, கோவை 3,876, ஈரோடு 1,199, காஞ்சிபுரம் 555, கன்னியாகுமரி 1,236, கிருஷ்ணகிரி 983, மதுரை 616, நாமக்கல் 791, நீலகிரி 416, ராமநாதபுரம் 179, சேலம் 1,089, தஞ்சாவூர் 1,117, தேனி 465, திருப்பத்தூர் 369, திருவள்ளூர் 746, திருவண்ணாமலை 534, திருவாரூர் 223, தூத்துக்குடி 407, நெல்லை 526, திருப்பூர் 1,504, திருச்சி 742, வேலூர் 192, விழுப்புரம் 517, விருதுநகர் 526 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu , Corona impact in Tamil Nadu has come down to 30,215
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...