மதுரை: மானாமதுரை நகராட்சி சேர்மன் பதவியை பட்டியலின மக்களுக்கு ஒதுக்கி வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழ்நாடு தேர்தல் ஆணையம், மாநில அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சமுதாய ரீதியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி அதன்படி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மதுரைக் கிளை கூறியுள்ளது.