சென்னை: நகர்புற உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது. வழக்கு விசாரணையை பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு நாளைக்கு ஒத்திவைத்தது. கொரோனா தாக்கம் குறையும் வரை நகர்புற உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க கோரிய மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.