சென்னை: தமிழகத்தில் 314 கோயில்களுக்கு ஒன்றிய அரசு வழங்கிய பாராட்டு சான்றிதழை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து அறிநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வாழ்த்து பெற்றார். 314 கோயில் அலுவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் சேகர் பாபு, தலைமைச் செயலாளர் இறையன்வு, மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.