×

தமிழ்நாட்டில் காவிரி - ஒகேனக்கல் 2வது கூட்டுக் குடிநீர் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும்: அமைச்சர் துரைமுருகன் உறுதி

சென்னை: தமிழ்நாட்டுக்கு ஒகேனக்கல் 2வது கூட்டுக் குடிநீர் திட்டத்தை தொடங்க சட்டப்படி உரிமை உண்டு என்று அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். குடிநீர் தேவைக்காக தண்ணீரை தரமாட்டோம் என்று கர்நாடகம் சொல்வது எந்தவித மனிதாபிமானம் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். 2018ல் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மூலம் காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதித்தீர்ப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. எப்படி பார்த்தாலும் ஒகேனக்கல் 2வது கூட்டுக் குடிநீர் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று துரைமுருகன் உறுதி அளித்துள்ளார்.

Tags : Tamil Nadu ,Minister ,Thurimurugan , Cauvery - Okanagankal, Joint Drinking Water Project, Minister Duraimurugan
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...